Saturday 14 September 2013

Ram

பழைய கூட்டணியில் மீண்டும் ஹன்சிகா

ஹன்சிகா, மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார். இது, காதலால் ஏற்பட்ட சந்தோஷம் அல்ல; அவரின், அடுத்த படம் குறித்த சந்தோஷம். இதுகுறித்து, அவர், என், அடுத்த படம் குறித்து, பல்வேறு வதந்திகள் உலா வருகின்றன. அவை எல்லாம் உண்மையில்லை. தீயா வேலை செய்யணும் குமாருபடத்துக்கு பின், மீண்டும், சுந்தர். சி இயக்கும் படத்தில் நடிக்கிறேன். அவருடன் பணியாற்றுவது, இனிமையான அனுபவம். இந்த படம், ஹீரேயினுக்கு முக்கியத்துவம் உள்ள படம். படத்தின் கதையே, என்னைச் சுற்றித் தான் நககிறது. இதனால், என் நடிப்புத் திறமையைவெளிப்படுத்துவதற்கு, எனக்கு சரியான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என, கூறியுள்ளார்.