பில்லா 2 - அஜித்தின் 51 வது படமாக அறிவிக்கப்பட்டது. "பில்லா" வை இயக்கிய விஷ்ணுவர்தன் இயக்குவதாக முடிவு செய்யப்பட்டு பிரமாண்டமான ஏற்ப்பாடுகள் தொடங்கின.
இதற்கிடையே ஒரே சமயத்தில் தமிழில் பில்லா 2 படத்தையும், தெலுங்கில் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட படத்தை இயக்குவதாகவும் ஒரு பேட்டியில் சொன்னார் விஷ்ணுவர்தன்.
பில்லா பட தயாரிப்பாளர்களான சுரேஷ் பாலாஜியுடன் மற்றும் வைட் ஆங்கிள் நிறுவனத்துடன், இப்படத்தை தயாரிக்க போவது, இந்தியாவின் குறிப்பிடத்தக்க தொழில் நிறுவனமான ஹிந்துஜா குழுமத்தை சேர்ந்த IN Entertainment (INE) நிறுவனம் ஒப்பந்தம் செய்து உள்ளது.
இந்நிலையில், தயாரிப்பாளர்கள் தரப்பு தெலுங்கு படத்தை ஒத்திவைக்கும்படியாக விஷ்ணுவர்தனிடம் கோரிக்கை விடுத்தது. பில்லா 2 - ஒரு பெரிய பட்ஜெட் படம் என்பாதால், இயக்குனர் விஷ்ணுவர்தன் முழு கவனமும் இப்படத்தில் செலுத்தவேண்டும் என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இயக்குனர் விஷ்ணுவர்தன் தெலுங்கு படத்தை கைவிட முடியாத நிலையில் இருப்பததாக தெரிவித்து இருக்கிறார்.
இதை தொடர்ந்து, அதிரடியாக விஷ்ணுவர்தன் இப்படத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.
யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ஒளிப்பதிவாளர் நிரவ்ஷா ஆகியோர் இந்த ப்ராஜக்டில் நீடிக்கிறார்கள்.
விஷ்ணுவர்தனுக்கு பதில், "பில்லா 2 " படத்தை இயக்க போகிறவர்...சாக்ரி டோலிடி.
சாக்ரி டோலிடி.....அமெரிக்காவில் படித்தவர். ஆங்கில குறும்படங்கள் இயக்கியவர். "தசாவதாரம்" படத்தில், கமலின் நண்பராக, அவர் அமெரிக்காவில் இருந்து தப்பிக்க உதவும் நண்பராக நடித்தவர்.
இதற்கிடையே ஒரே சமயத்தில் தமிழில் பில்லா 2 படத்தையும், தெலுங்கில் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட படத்தை இயக்குவதாகவும் ஒரு பேட்டியில் சொன்னார் விஷ்ணுவர்தன்.
பில்லா பட தயாரிப்பாளர்களான சுரேஷ் பாலாஜியுடன் மற்றும் வைட் ஆங்கிள் நிறுவனத்துடன், இப்படத்தை தயாரிக்க போவது, இந்தியாவின் குறிப்பிடத்தக்க தொழில் நிறுவனமான ஹிந்துஜா குழுமத்தை சேர்ந்த IN Entertainment (INE) நிறுவனம் ஒப்பந்தம் செய்து உள்ளது.
இந்நிலையில், தயாரிப்பாளர்கள் தரப்பு தெலுங்கு படத்தை ஒத்திவைக்கும்படியாக விஷ்ணுவர்தனிடம் கோரிக்கை விடுத்தது. பில்லா 2 - ஒரு பெரிய பட்ஜெட் படம் என்பாதால், இயக்குனர் விஷ்ணுவர்தன் முழு கவனமும் இப்படத்தில் செலுத்தவேண்டும் என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இயக்குனர் விஷ்ணுவர்தன் தெலுங்கு படத்தை கைவிட முடியாத நிலையில் இருப்பததாக தெரிவித்து இருக்கிறார்.
இதை தொடர்ந்து, அதிரடியாக விஷ்ணுவர்தன் இப்படத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.
யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ஒளிப்பதிவாளர் நிரவ்ஷா ஆகியோர் இந்த ப்ராஜக்டில் நீடிக்கிறார்கள்.
விஷ்ணுவர்தனுக்கு பதில், "பில்லா 2 " படத்தை இயக்க போகிறவர்...சாக்ரி டோலிடி.
சாக்ரி டோலிடி.....அமெரிக்காவில் படித்தவர். ஆங்கில குறும்படங்கள் இயக்கியவர். "தசாவதாரம்" படத்தில், கமலின் நண்பராக, அவர் அமெரிக்காவில் இருந்து தப்பிக்க உதவும் நண்பராக நடித்தவர்.
கமல்ஹாசன் மற்றும் எழுத்தாளர் இரா.முருகன் ஆகியோருடன் "உன்னை போல் ஒருவன்" விவாதத்திலும் முழுமையாக பங்கெடுத்தார் சாக்ரி.
"உன்னை போல் ஒருவன்"- ஹிந்தி படத்தின் ரீமேக் என்றாலும், எளிமையான கதையை , ஒரு புதிய பாணியில் அருமையாக சொல்லி அசத்தி இருந்தார் இயக்குனர் சாக்ரி.
அவரது இரண்டாவது படமான "பில்லா 2 " அதற்க்கு நேர்மாறாக, தமிழில் முதல்முறையாக ஹாலிவுட் நடிகர்கள் சிலர் நடிக்க, அஜித் இதுவரை நடித்த படங்களிலேயே மிக பெரிய பட்ஜெட்டில் தயாராக போகிறது.அஜித் - சாக்ரி என தமிழுக்கு ஒரு ப்ரெஷ்ஷான கூட்டணி உருவாகி இருக்கிறது.
இயக்குனர் விஷ்ணுவர்த்தனுக்கு, இந்த வாய்ப்பு பறிபோனது பெரிய இழப்பு என்றாலும், சாக்ரி டோலேடி, இப்படத்தை இயக்க போவது, "பில்லா" படத்தின் சாயலில் இருந்து அஜித்துக்கு இது ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பலாம்.